நவராத்திரி


நவராத்திரி


அன்னை பராசக்தியை விழா எடுத்து, விரதம் இருந்து வழிபடும் விழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. தீமையை அழித்து நன்மையை காப்பதற்காக அன்னை பராசக்தி, அசுரனுடன் போர் புரிந்த 9 நாட்களும் நவராத்திரி விழாவாக கொண்டாடுகிறோம்.

நவராத்திரியின் 9 நாட்களில் முதல் 3 நாட்கள் தேவியை துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுகிறோம்.நவராத்திரியின் 9 நாட்களும் வீடுகளில் கொலு வைத்து, அம்பாளை வீடுகளில் எழுந்தருளச் செய்கிறோம்.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான 10 ம் நாள், அசுரனை அன்னை வதம் செய்து வெற்றி பெற்ற நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் :

வடிவம் : மகேஸ்வரி

திதி: பிரதமை

கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை.

ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

இரண்டாம் நாள்:

வடிவம் : ராஜராஜேஸ்வரி , கௌமாரி

திதி : துவிதியை

கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.

பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.

ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.

பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

மூன்றாம் நாள் :

வடிவம் : வாராகி

திதி : திருதியை

கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.

பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்.

ராகம் : காம்போதி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.

பலன் : தணதானியம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

நான்காம் நாள் :

வடிவம் : மகாலட்சுமி

திதி : சதுர்த்தி.

கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.

பூக்கள் : செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.

ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம்.

மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.

பலன் : கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள் :

வடிவம் : வைஷ்ணவி, மோகினி

திதி : பஞ்சமி.

கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.

பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.

ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.

பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

ஆறாம் நாள் :

வடிவம் : இந்திராணி, சண்டிகாதேவி

திதி : சஷ்டி.

கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.

பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.

நைவேத்தியம் : தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.

ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.

பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

ஏழாம் நாள் :

வடிவம் : அன்னபூரணி, சரஸ்வதி, சாம்பவித் துர்க்கை

திதி : சப்தமி

கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.

பூக்கள் : தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை.

நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.

ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.

பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

எட்டாவது நாள் :

வடிவம் : நரசிம்ம தாரினி , துர்க்கை

திதி : அஷ்டமி.

கோலம் : பத்ம கோலம்

பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.

நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

ஒன்பதாம் நாள் :

வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி

திதி : நவமி

கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.

பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.

நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை.

ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.

பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.

பத்தாவது நாள் :

வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)

திதி : தசமி

பூக்கள் : மல்லிகை, ரோஜா , வாசனைப் பூக்கள்

நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள்.

பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.