Ganesha Mantra / Sloka

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்

ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே !!


ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத் !!


ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத் !!


மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே !!


கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்

உமாஸுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் !!


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்

இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்

கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே

நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா !!


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே !!


விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான்

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்

தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து !!


வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ !!


கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

கணபதி என்றிடக் கருமம் ஆதலால்

கணபதி என்றிடக் கவலை தீருமே !!


அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம்

நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்

மேவும் கணபதியைக் கைதொழுதக் கால் !!